செப். 28 10:37
(மட்டக்களப்பு, ஈழம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியில் கால்நடைகளுக்கும் அவற்றை மேய்ப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பறு தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்ட மைலத்தமடு, மாதவணை, பெரிய மாதவணை ஆகிய இடங்களில் கால்நடைகள் மேய்க்கப்படுகிறன. இனம் தெரியாதவர்களினால் இரவில் கால்நடைகள் திருடப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கக்கிழமை இரவு வாடிக்கு வந்த இனம் தெரியாத ஐந்து நபர்கள், உறங்கிக் கொண்டிருந்த பண்ணையாளர் ஒருவரைப் பிடித்து மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, மற்றொருவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் குறித்த பண்ணையாளர் கூ்ச்சலிட்டதால் பக்கத்து வாடிக்காரர்கள் உசாரடைந்தனர்.