டிச. 29 23:49
(யாழ்ப்பாணம், ஈழம் )
நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த புதிய அரசியல் யாப்பு வரைபைத் தடுக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படும் போது பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகவே யாப்பு மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்குரியது என்றும் சுமந்திரன் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் பல விடயங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.