பெப். 03 15:14
(யாழ்ப்பாணம், ஈழம் )
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார். பாலியல் நோக்கு நிலை, பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள், பாகுபாடுகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஆராய்வு செய்யும் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் என்பவரே இலங்கைக்கு வரவுள்ளார். போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மை நிலைமைகளைக் கண்டறிய கொழும்புக்குப் பயணம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்களை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.