ஏப். 30 14:17
(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையில் தங்கியுள்ள தங்கள் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் கனேடிய அரசாங்கமும் கோரியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 16 நாடுகளும் இலங்கைக்குச் செல்ல வேண்டாமென தங்கள் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக, இலங்கைக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசியமான காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குச் செல்லுமாறு, அவுஸ்திரேலியா, ரஸ்யா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்துடன் நோர்வே, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.