மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டுக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றினால் கண்ணிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுகின்றது. இந்த நிலையிலேயே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டு இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு நீதிபதி எஸ் .லெனின்குமார் குறித்த இடத்தை நேற்று முந்தினம் பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைச் சட்ட வைத்திய அதிகாரி தனுசன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.
அகழ்வின் போது மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தடைய பொருட்கள் சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்