போர்- சுனாமி தாக்கங்களினால்

சேதமடைந்த கிராமங்கள், வீதிகள் புனரமைக்கப்படவில்லை- வாகரை இறால்ஓடைக் கிராம மக்கள் கவலை

மதிப்பீடுகள் செய்யப்பட்டும் காலதாமதமடைவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 01 18:54
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 11:11
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இறால்ஓடைக் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படும் பிரதான வீதியை செப்பனிடுமாறு கிராம மக்கள் பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச சபையின் உறுப்பினர் சிறில் அன்டன் தெரிவித்தார். இந்த வீதியால் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகி்ன்றது. மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
 
இதனால் இறால்ஓடைக்கிராமத்திலிருந்து வைத்தியசாலை, பாடசாலை, பொதுச் சந்தை போன்ற இடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தால் தமிழர் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமங்களுக்கான அபிவிருத்தித் திட்டத்திற்கு கூடுதலான நிதி பயன்படுத்தப்பட்டாலும், கிராம மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி கணேஸ்வரன் பரமேஸ்வரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு ஏலவே கூறியிருந்தார்.

தற்போது இறால்ஓடைக்கிராமத்தில் சேதமடைந்துள்ள வீதியைத் திருத்துவதற்கு அனைத்து மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்து சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ளன.

ஆனால் இதுவரையில் எவ்விதமான புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லையென உறுப்பினர் அன்டன் கூர்மை செய்தித்தலத்திற்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வாகரைப் பிரதேசம் கடந்த காலத்தில் போர் மற்றும் சுனாமி தாக்கத்தினால் பெரும் அழிவுகளை எதிர்நோக்கிய கிராமத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டியது இல்ங்கை அரசின் கடமையாகும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அமைப்பதற்காக அல்லது திருத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பாவிக்கப்படுவதில்லை.

அத்துடன், அவை உரிய காலத்தில் நிறைவு செய்து முடிக்கப்படுவதுமில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வடமேற்காக 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க முடியவில்லை என பிரதேச செயலாளர் ராஜ்பாபு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.