ஆனால், ஆடைகள், துணிகள் எதுவும் மீட்கப்படவில்லை. இதனால் சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை என அகழ்வுப் பணியில் ஈடுபடும் களனி பல்கலைக்கழக நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறுகின்றார்.
இந்தப் போர்க்கால மனிதப் புதைகுழி நான்கு தொடக்கம் ஐந்து அடி வரையான ஆழத்திற்கு அகழப்பட்டுள்ளது. ஆனால் எலும்புக் கூடுகளைத் தவிர வேறு மனித எச்சங்கள் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் கூறினர்.
ஆனாலும் மேலும் மனித எலும்புக் கூடுகள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக மன்னார் ஊடவியலாளர் ஒருவர் கூறினார்.
அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து சிறிய தூரத்தில் உள்ள நடைபாதையில், ஐந்து அடி ஆழத்திற்கு ஏற்கனவே அகழ்வு விரிவுபடுத்தப்பட்டிருந்து.
கடந்தவாரம் நுாற்றி இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு 95 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டிருந்தன.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இடம்பெறும் அகழ்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள நிதிப் பிரச்சினை உள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச ஏலவே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.