நவ. 26 10:26
(யாழ்ப்பாணம், ஈழம்)
தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலை அடுத்து முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் இலங்கை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிவாஜிலிங்கத்தின் இந்தச் செயற்பாடு முன் யோசனையில்லாதது என்றும் தமது சொந்த அரசியல் நலன் கருதி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மகிமையை பயன்படுத்துவது தவறானது என்றும் மக்கள் குறை கூறியுள்ளனர்.