கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 18 11:46

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சர்வதேச நீதி

(வவுனியா, ஈழம்) உள்ளக பரிகாரங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்பதை உணர்ந்து, தமக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு சர்வதேசப் பொறிமுறையையும் உலகளாவிய நீதியையுமே, ஈழத்தமிழர்கள் இன்று முதன்மை நியாயமாக முன்வைக்கின்றனர். இந்த நியாயத்தின் பின்னால் தட்டிக்கழிக்க முடியாத புவிசார் அரசியல் உண்மைகளும், நீதிக்கான தர்க்கங்களும் பலமாக உண்டு. இந்த அரசியல் யதார்த்தத்தையே முள்ளிவாய்க்காலின் உதிரம் தோய்ந்த நினைவுகள் தமிழர்களுக்குக் கோட்பாட்டுப் படிப்பினையாக கற்பிதம் செய்துள்ளன.
டிச. 28 07:16

அமெரிக்க - இந்திய இராஜதந்திர நகர்வுகளை அவதானிக்கும் அநுர

(வவுனியா, ஈழம்) அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அமைவதற்கு முன்னராகவே அமெரிக்க - இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தனிக் கவனம் இலங்கை மீது அதிகரித்திருந்தது. அநுர ஜனாதிபதியான பின்னரும் இந்த நாடுகளின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அநுர ஆட்சிக்குப் புதியவர் என்ற கோணத்தில் சில பரிந்துரைகளை இந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகள் வழங்கியிருந்தன. குறிப்பாக மீள் நல்லிணக்கம் என்பதும் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற சர்வதேசச் சொல்லாடல்களுக்கு உரிய பரிந்துரைகள், அநுர அரசாங்கத்தக்கு வழங்கப்பட்டிருந்தன.
டிச. 22 10:19

ஸ்ராலினுக்கு நோகாமல் பேசிய கஜேந்திரகுமார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.
ஜூன் 07 21:15

திம்புக் கோட்பாட்டை முதன்மைப்படுத்துவாரா கஜேந்திரகுமார்? சுரேஸ் - சித்தார்த்தன் - செல்வம், நிலைப்பாடு என்ன?

(முல்லைத்தீவு, ஈழம்) அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜன. 07 08:02

தமிழ்த் தேசியப் பரப்பின் கவனத்தை ஈர்த்துள்ள பேராசிரியர் ரகுராமின் உரை

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றங்களுக்கும் ஏமாற்றங்களுக்குமிடையே நம்பிக்கை தரும் ஓர் உரையாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஞாயிறன்று ஆற்றிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் இம்முறை மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்டிய ரகுராமின் உரை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய நன்றியுரையில் அவற்றை வரவேற்றும் உள்ளார். இந்த வரவேற்பு உண்மையான சுயவிமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.