(மன்னார், ஈழம்)
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இலங்கைத்த தீவு முழுவதிலும் இலங்கை முப்படையினர், இலங்கை விசேட அதிரடிப் படையினர். இலங்கைப் பொலிஸார் தொடர்ச்சியாக தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் கூடுதலாகக் காணப்படுகின்றன.