(வவுனியா, ஈழம் )
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என இலங்கையின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திற்கு இந்த உதவிகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் நிரோஷன் பெரேரா எதுவும் கூறவில்லை. அதேவேளை,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா வடமாகாண சபையின் மூலமாக உதவியளிக்க வேண்டும் என முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.