நவ. 11 06:37
(யாழ்ப்பாணம், ஈழம்)
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அஞ்சலி வணக்கம் நடைபெற்றது. நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.