கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
செப். 14 14:21

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 11 21:01

சுமந்திரன்-பீரிஸ் பேச்சுவார்த்தையில் அமெரிக்க-பசில் நகர்வு என்ற குட்டு மேலும் வெளிக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இலங்கை ஒற்றையாட்சி ராஜபக்ஷ அரசின் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரீசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரனின் சந்திப்பு கடந்த புதன்கிழமை (04 ஓகஸ்ட்) நடைபெற்றது என்ற விடயத்தை சுமந்திரனுடன் நெருங்கிய உறவைப் பேணும் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் வெளியிடும் காலைக்கதிர் நாளேட்டில் ''இனி இது இரகசியம் அல்ல'' என்று மின்னல் எனும் பெயரில் அவரே எழுதும் பத்தியில் புதன்கிழமையன்று (11 ஓகஸ்ட்) குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பக்கம் இந்த நகர்வு என்றால் பேரம்பேசல் எனும் நாணயத்தின் மறுபக்கம் என்ன என்ற புவிசார் அரசியற் கேள்விக்கான பதில்களும் ஊகங்களும் வலுத்துள்ளன.
ஓகஸ்ட் 08 16:42

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் பீரிசுடன் சுமந்திரன் சந்திப்பு

புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் அமெரிக்காவுக்கு பசில் ராஜபக்ஷ பயணித்திருந்தபோது இரகசிய நகர்வொன்றை முன்னெடுத்திருந்தது. பசில் ராஜபக்ஷவுடனும் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழ்க்குழு ஒன்றுடனும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. சுமந்திரனுடனும் இணக்கத்தை ஏற்படுத்தி ஓர் இரகசிய நகர்வை ஆரம்பித்த தகவலையும் அதன் புவிசார் அரசியற் பின்னணியையும் ஜூன் 20ம் திகதி கூர்மை ஆசிரியபீடம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த இரகசிய நகர்வின் அடுத்த கட்டம் தற்போது அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிசுடன் சுமந்திரன் இரகசியமாகக் கலந்துரையாட வைக்கப்பட்டதன் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஓகஸ்ட் 01 13:21

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர் மூழ்கியிருக்கிறார்கள். இந்த ''இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மான மாநாட்டின்'' உள்ளடக்கம் என்ன வடிவம் எடுக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை முற்கூட்டியே ஈழத்தமிழர் சமூகம் ஆராய வேண்டும். ''வட்டுக்கோட்டை நமஹ, இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ, பதின்மூன்று நமஹ'' என்று பயணிக்கவும் ''சுயநிர்ணயம்'' பேசலாம் என்ற மூடுமந்திரமாக அது இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.
ஜூன் 07 23:55

ஜேர்மனி பேரம் பேசியுள்ளதா? பிரித்தானியாவுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சூழ்ச்சியா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான அதாவது நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்த பிரித்தானியா, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் சூழ்ச்சிகளையும் அன்று வகுத்திருந்தது. தற்போது ஒன்றியத்தில் இருந்து விலகிய நிலையில், ஜேர்மன் அரசு மூலமாக ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.