செப். 16 15:11
(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வைத்தியக் கலாநிதி லக்ஸ்மன் ஆகியோரின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை நடத்திய மூன்றாவது எழுக தமிழ் நிகழ்வில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளித் திடலை நண்பகல் 12.30 அளவில் சென்றடைந்தது.