ஒக். 25 21:33
(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் மனிதப்புதை குழிகள் ஆங்காங்கே தென்பட்டு வருகின்றன. மன்னார், நகர நுழைவாசலிலும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகிலும் யாழ் கல்வியங்காடு செம்மணிப் பகுதியிலும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனாலும் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறாமையினால் மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில் மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.