(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கைத்தீவில் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்துகளை மீண்டும் உடனடியாக நிறுத்திக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாத்திரம் கொவிட் மற்றும் டெல்ரா தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டு 74 பேர் உயிரிழந்துள்ளனர். சென்ற முதலாம் திகதியில் இருந்து போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் நெருக்கமாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்வதை அவதானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.