(வவுனியா, ஈழம்)
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்தின் ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வைக் கண்டித்து, ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் ஜே.வி.பி கேட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தைக் கவிழ்த்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால்கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பி எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா கூறுகின்றார்.