(வவுனியா, ஈழம்)
எரிபொருட்களை ஏற்றிவரும் கப்பல் மேலும் தாமதமடைவதால், எரிபொருள் விநியோகம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகுமென அமைச்சர் கஞ்சன விஜேரட்ன தெரிவித்துள்ளார். இதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் அவர் கூறினார். எரிபொருட்கள் இல்லாமையினால் கொழும்பில் இந்தவாரம் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெளி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயற்பட்டு வந்தன.