நிரல்
ஜூலை 16 22:21

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன?

ஊடக விரிவுரை ஒன்றுக்காக சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்ட , அனுராதபுரம் பதவியா, கிராமத்துக்குக் கடந்த யூன் 28, யூலை 08 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் சென்று வந்தேன். அருகே பதவிசிறிபுர, வெலிஓயா கிராமங்கள் உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் உண்டு. பதவிசிறிபுரவைத் தவிர ஏனைய கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகப் பிரிவில் அடங்கினாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முல்லைத்தீவு. வவுனியா, மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய காணிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதாவது வடக்குக் கிழக்கு எல்லையை இணைக்கும் தமிழ்க் கிராமங்கள்தான் இவை.
ஜூன் 26 11:37

போர்க்காலச் செய்தியாளர் தில்லைநாதனின் ஊடக வகிபாகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நாளிதழ்கள், ஞாயிறு வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்து வழங்கும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பிராந்தியங்களில் இருந்து செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களை நிருபர்கள் என்ற அடைமொழி கொண்டும் அழைப்பர். இவர்கள் நேர்காணல், கவனித்தல் மற்றும் ஆய்வுசெய்து ஊடாகச் செய்திகளைச் சேகரிப்பார்கள். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஊடகத்துறையில் செய்தியாளர்களாகப் பணிபுரிவோருக்கு இலங்கையில் ஊடகத்துறைப் பட்டப்படிப்புகள் மற்றும் ஊடகக் கற்கை நெறிகள், பயிற்சிகள் என்று பல திட்டங்கள் உண்டு. ஆனால் அதற்கு முந்திய காலாத்தில் அதுவும் 1950 களில் செய்தியாளர்களுக்குப் பயிற்சிகள் என எதுவும் இருந்ததில்லை.
ஜூன் 24 17:46

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி

(மட்டக்களப்பு, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு "தேசிய இயக்கம்" போன்ற அமைப்பையே எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் கடந்த பதினான்கு வருடம் சென்ற பின்னரும்கூட அது சாத்தியமாகவில்லை. தேர்தல் வியூகங்களுடன் கட்சி அரசியல் மாத்திரமே வளர்ந்து வருகின்றன. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்த்தேசிய அரசியல் இயங்கு நிலைக்குத் 'தேசிய இயக்கம்' அவசியம் என்றும் அந்தத் தேசிய இயக்கமே இலங்கை அரசாங்கத்துடனும் கொழும்புக்கு வந்து செல்கின்ற சர்வதேச அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் மக்கள் விரும்பியிருந்தனர்.
ஜூன் 18 09:23

பணிப்பாளரின் பதவி விலகலும் பௌத்த மயமாக்கல் வியூகங்களும்

(வவுனியா, ஈழம்) 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவு ஒற்றையாட்சி அரசு என்பதை மேலும் உறுதிப்படுத்தும் சிங்களத் தலைவர்களின் அரசியல் வேலைத் திட்டங்கள் தற்போது, கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முழுமையடைந்து வருகின்றன. அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகள் தமக்கிடையே ஏட்டிக்குப்போட்டியான காரியங்களில் ஈடுபட்டாலும் இலங்கை ஒற்றையாட்சி என்பதை ஏற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சென்ற ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போதும் பகிரங்கமாகப் பெருமையோடு கூறியிருந்தார். 2021 இல் கண்டியில் ஞானசார தேரர், இலங்கை பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தபோது, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே அதனைக் கண்டித்திருந்தார்.
ஜூன் 11 10:40

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் எதிர்வரும் வாரங்களில் சீனாவுக்குப் பயணம் செய்வார் என்று அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் (BloombergNews) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின்னர் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செய்தி நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும் அண்டனி பிளிங்கனின் சீனப் பயணம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரபூர்வமாகச் செய்தி வெளியிடவில்லை. சீனாவின் வெளியுறவு அமைச்சும் அவ்வாறு அறிவிக்கவில்லை. இருந்தாலும் சீனாவின் அதிகாரபூர்வ செய்தித் தளமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) அண்டனி பிளிங்கனின் வருகையைச் சீனா வரவேற்பதாகக் கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. 
ஜூன் 04 09:25

நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா?

இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ரசிய - உக்ரெயன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில் எவருக்குமே பயனில்லாத ஒன்றாகவே தென்படுகின்றன. குறிப்பாகத் தேசிய விடுதலை கோரி நிற்கும் பலஸ்தீனியர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் குர்திஸ் இன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு விரோதமாகவே இச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. பிரதமர் மோடியை அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் மாறி மாறிப் புகழாரம் சூட்டுவதோடு, இந்தியப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் தத்தமது நாடுகளுக்கிடையிலான சர்வதேச வர்த்தகங்கள் பற்றிய நீண்ட உரையாடல்களையும் நடத்தி வருகின்றன.
ஜூன் 01 13:24

மலையகத் தமிழர்களின் கூட்டிருப்புக்கு விடுக்கப்படும் சவால்

இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு தமக்கான ஓர் அடையாளம் இருக்க வேண்டியது மலையக மக்களுக்கு மிக மிக அத்தியவசியமான விடயமாக இருக்கின்றது.
மே 31 15:08

சர்வதேச முதலீடுகளும் தமிழ்த்தேசிய அரசியல் நீக்கமும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகள் பெற்றுள்ள நிலையிலும், மேலும் கடனுதவிகளை எதிர்பார்க்கும் பின்னணியிலும் இலங்கை தமது வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை குறித்த தீர்மானங்களுக்கு உரிய பொறுப்புக் கூறப்படவில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குரிய ஏற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி ரணில் துரிதமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் அமெரிக்க இந்திய மற்றும் ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கும் வழி வகுக்கப்படுகின்றது.
மே 21 08:09

இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய - இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியத் திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற வியூகத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் வகுக்கப்படுகின்றன. ரணிலின் புதுடில்லிப் பயணம் இதற்குப் பதில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மே 18 08:22

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி முளளிவாய்க்கால் பிரதேசத்தில் ஒன்றுகூடிய மக்கள்

தமிழ் இன அழிப்புக்கு நீதிகோரி வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை முற்பகல் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள் தீபங்களை ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனி கடந்த பண்ணிரெண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.