கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 30 14:33

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருந்தனர்- ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவரை பிரதம நீதியரசராகப் பதவி உயர்த்தியிருந்தார்.
மே 26 15:41

ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் பதிவு இலக்கம் இல்லாமல் சட்டத்தரணியாகப் பணியாற்ற முடியாது. பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த சங்கங்கள் மூலமான அங்கீகாரம் இன்றி அந்தத் தொழில் ஈடுபட முடியாது என்றவொரு விதி உண்டு.
மே 19 21:09

வடக்குக்- கிழக்கு மாகாணங்களை இணைக்க சர்வதேச நீதிமன்றத்தை ஏன் நாட முடியாது?

(யாழ்ப்பாணம் ) இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இலங்கையில் எட்டு மாகாண சபைகள் அன்று உருவாக்கப்பட்டிருந்தன. 1987ஆம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்த மாகாண சபை முறை உருவானது என்பது வரலாறு. ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக அன்று இந்த மாகாண சபைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு சூலிலேதான் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியைத் தூண்டிவிட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்வித்திருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. (போரை நடத்த ஜே.வி.பி அப்போது மகிந்த ராஜபக்சுவுக்குப் பக்கபலமாக இருந்தது)
மே 15 22:42

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர்காணல்களில் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மே 11 19:49

இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துறையின் நம்பகத் தன்மை குறித்த விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும்.