ஜன. 09 07:30
(முல்லைத்தீவு)
பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பின்னால் இலங்கையின் திட்டமிடலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழர்கள் 13 ஐ மாத்திரம் கேட்டால் போதும் என்ற மன நிலை இலங்கையிடம் உண்டு. இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுபட்ட தமிழ்த்தரப்புகளைக் கையாண்டு எடுக்கப்பட்டிருந்த பல முயற்சிகள் தோல்வி கண்டதன் பின்னணியில், புதிய முயற்சியின் மூலம் இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையைச் செயற்படுத்தியிருக்க வாய்பில்லாமில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடாமல் தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளமையும், குறித்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வேண்டுமென்ற அவசரத்தையும் காண்பித்திருக்கிறது.