செய்தி: நிரல்
மே 18 07:20

சர்வதேச பொறிமுறை மூலமாக நீதி வழங்கப்பட வேண்டும்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்பு தொடர்பான விவகாரங்களை ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக வடக்குக் கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard) தெரிவித்திருக்கின்றனர். மே 18, 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
டிச. 21 04:22

இமாலயப் பிரகடனத்தை 69 சிவில் சமூக அமைப்புகள் நிராகரிப்பு

(திருகோணமலை ) சுரேன் சுரேந்திரன் என்பவர் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை என்ற தனிமனிதர் குழு, கொழும்பில் பௌத்த மகா சங்கங்களுடன் இணைந்து முன்வைத்த இமாலயப் பிரகடனத்தை அறுபத்தியொன்பது பொது அமைப்புகள் கூட்டாக நிராகரித்துள்ளன. திருகோணமலை ஆயர் கிறிஸ்ரியன் றோயர் இமானுவல், யாழ் ஆயர் இல்ல குருமுதல்வர் அருட்தந்தை பி.ஜே.யெபரட்ணம், திருகோணமலை தென்கையிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், கொழும்பில் உள்ள இலங்கைத் திருஅவையின் யாழ் மாவட்ட குரு குமுதல்வர் அருட்தந்தை எஸ்.டி.பி.செல்வன் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட அறுபத்தியொன்பது சிவில் சமூக அமைப்புகளே இமாலயப் பிரகடனத்தை கூட்டாக நிராகரித்துள்ளன.
மே 18 08:22

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி முளளிவாய்க்கால் பிரதேசத்தில் ஒன்றுகூடிய மக்கள்

தமிழ் இன அழிப்புக்கு நீதிகோரி வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை முற்பகல் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள் தீபங்களை ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனி கடந்த பண்ணிரெண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஏப். 04 09:26

சஜித் அணியில் இருந்து மூவர் ரணில் அரசாங்கத்துக்குச் செல்வர்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும், அதனை சஜித் பிரேமதாச மறுத்திருந்தார். ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்களின் பிரகாரம் மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரியவருகின்றது. பொருளாதார நிபுணரும் கொழும்பு மாவாட்ட உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா, மற்றும் ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய மூன்றுபேரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன
மார்ச் 29 22:22

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சஜித் அணி கோரிக்கை

(வவுனியா, ஈழம்) எரிபொருள் சந்தை தாராளமயமாக்கல், மத்திய வங்கி திருத்தச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அங்கீகாரத்தைப் பெற்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கினர்.