(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட இலங்கைத் தீவின் பல மாவட்டங்களில் பணியாற்றும் 72 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு , கல்முனை, சம்மாந்துறை, மூதூர், ஊர்காவல்துறை, சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய தமிழ் பகுதிகளில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இவ்விதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்திற்கமைய நீதிபதிகளின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.