டிச. 21 20:10
(மன்னார், ஈழம்)
தமிழர் தாயகமான வட மாகாணத்தின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு பகல் ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் இழுவைப்படகுகளில் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டவேளை, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்திய மீனவர்களின் ஆறு இழுவைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.