(வவுனியா, ஈழம்)
இலங்கைத்தீவில் எரிபொருட்கள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரசியாவிடம் இருந்து குறைந்தவிலையில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் இருந்து முரண்பட்டுத் தனித்து இயங்கும் ஒன்பது சிறிய கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கையை முன் வைத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், அரசாங்கத்தின் சார்பில் இரண்டு அமைச்சர்கள் ரசியாவுக்குச் சென்று கலந்துரையாடவுள்ளதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.