(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பதாவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைத் திசை திருப்பும் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.