செப். 10 16:25
(கிளிநொச்சி, ஈழம்)
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி மீதும் அவரது மனைவி, 14 வயது மகள், கைக்குழந்தை மீதும் கனகராயன் குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையாகத் தாக்கியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளியான பே.வசந்தக்குமார் அவரது மனைவி அவரது 14 வயது மகள் ஆகியோர் கிளிநொச்சி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மகளுக்கு வயிற்றில் கடுமையான காயங்கள் உள்ளதால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.