ஏப். 15 23:10
(யாழ்ப்பாணம், ஈழம் )
வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவா எனப்படும் குழவின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுத்துறையும் இலங்கைப் பொலிஸாரும் செயற்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் இலங்கைப் பொலிசார் நடத்திய சோதனை, தேடுதல் நடவடிக்கைகளில் ஆவா குழுவைச் சேர்ந்த எட்டுப்போர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய், உடுவில் பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாயில் உள்ள இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.