கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 01 15:50

பொதுசன அபிப்பிராயங்களை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டும்

(திருகோணமலை ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் பலவீனமடைந்துள்ளதால், சிவில் சமூக அமைப்புகள் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பொதுசன அபிப்பிராயங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் சிதறுண்டு தமது வசதி வாய்புகளுக்கு ஏற்ற முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பை ஏற்றுச் செயற்படுவதால் அரசியல் தீர்வுக்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன.
நவ. 29 19:03

இந்தியாவின் நானூறு மில்லியன் டொலர்கள் உதவியைப் புறம்தள்ள முடியாத சிக்கலுக்குள் இலங்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்திய பேச்சுக்களின் முழுமையான விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்சவுக்கான சில விடயங்களை நரேந்திரமோடி கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தித், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வை வழங்குவது அவசியமென அறிவுறுத்தியுள்ளார் மோடி. அத்துடன் இலங்கைக்கு வழங்கும் கடனுதவியை நானூறு மில்லியின் அமெரிக்க டொலர்களாக மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நவ. 23 08:08

மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நவ. 13 10:27

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்குப் பதிலாக இறக்குமதி உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கைத்தொழில்கள், உற்பத்திகள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இந்தப் பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நவ. 08 22:28

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளோடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடியது. இறுதியில் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் முன்னணி தவிர்ந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தன. இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆவணம் சிங்கள ஆங்கில ஊடகங்களில் ஈழக் கோரிக்கையாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததையடுத்துத் தமிழ்க் கட்சிகளைச் சந்திக்காமலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த ஆவணத்தை ஏற்க முடியாதெனக் கூறிவிட்டனர்.