கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 31 22:15

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.
டிச. 22 22:40

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச. 12 23:15

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

(முல்லைத்தீவு) அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.
டிச. 11 15:19

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

(கிளிநொச்சி, ஈழம்) போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுகிறது. இலங்கை இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல, இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.
நவ. 30 09:20

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்- வெளிப்படுத்தப்பட்ட கூட்டுரிமையும் மறைக்கப்பட்ட அடையாளங்களும்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுத் தமது கூட்டுரிமையை வலியுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு- மஞ்சள் நிறக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. சட்டப் பாதுகாப்போடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில பிரதிநிதிகள் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.
நவ. 28 09:12

குறைகூற விரும்பாத அமெரிக்க- இந்திய அரசுகள்

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழர் விவகாரத்தை அமெரிக்க இந்திய அரசுகள் எப்படி கையாளுகின்றன என்பது பற்றிய விளக்கங்கள், அதனை மாற்றியமைக்க வேண்டிய வழிமுறைகள், இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரையும் ஒரே குரலில் பேசுவதற்கான புள்ளியில் வருவதாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு குரலில் பேசுகின்றனர். முன்னைய ஆட்சியாளர்கள் அணுகிய இராஜதந்திரத்தைப் புதிய ஆட்சியாளர்கள் தொடரும் பண்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இருந்து வருகின்றது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
நவ. 23 00:54

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(கிளிநொச்சி, ஈழம்) இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற பின்னரான சூழலிலும் பூகோள மற்றும் புவிசார் அரசியல் நிலமைகள் தொடர்பாக கூர்மைத் தளத்தில் செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பசில் ராஜபக்ச அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த யூன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
நவ. 20 23:08

இந்தோ- பசுபிக் விவகாரமும் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முற்படும் அமெரிக்க இந்திய மற்றும் சீன அரசுகள், இலங்கைக்கு அதிகளவு நிதியுதவிகளை ஏட்டிக்குப் போட்டியாக வழங்கி வருகின்றன என்பதை கொழும்பில் உள்ள இந்த நாடுகளின் தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டாலும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வல்லாதிக்க நாடுகள் நம்புவதுபோல் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்று காண்பிக்கப்பட்டாலும், வடக்குக் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் நோக்கிலேயே இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிதியைக் கையாளுகின்றது.
நவ. 02 15:48

அமெரிக்க இந்திய நலன்களுக்கு ஏற்ப 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய இலங்கை அரசுகளிடம் கோரவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டம் முடிவடைந்ததும் கூர்மைச் செய்தித் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
செப். 15 22:56

அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி

(மன்னார், ஈழம்) வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.