(மட்டக்களப்பு, ஈழம்)
கொழும்புக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், (Clement Nyaletsossi Voule) இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர், ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அகமட் ஜவாத் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். உடனடியாக மேலதிக் செயலாளர் பதவியில் இருந்து விலக்குமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நீதித்துறை நீதியரசர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.