செய்தி: நிரல்
நவ. 10 22:45

நீதிமன்றங்களில் முன்னிலையாக குருபரனுக்குத் தடை- சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குச் சார்பாக இலங்கை நீதிமன்றங்களில் வாதிட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு கொழும்பில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இது குறித்துக் கருத்து வெளியிட குருபரன் மறுத்துள்ளார். இந்தத் தடையுத்தரவு குறித்த கடிதம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி சென்ற ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதியே பேராசிரியர் க.கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவ. 09 21:56

தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம்- வெளியிட்டார் சிவாஜிலிங்கம்

(திருகோணமலை, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் க.ம.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று சனிக்கிழமை திருகோணமலையில் வெளியிட்டார். தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விஞ்ஞாபனத்துக்குத் தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவ. 08 14:17

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியை நிறுத்திய இராணுவத்தினர்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் இங்கு வந்த இலங்கை இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நிறுத்தவில்லையானால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
நவ. 07 12:37

ஒற்றுமையை வெளிப்படுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம்

(கிளிநொச்சி. ஈழம்) பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க முடியாது. ஒருவர் புடையன் பாம்பு என்றால் மற்றையவர் நாகபாம்பு என வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமது சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. எனினும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து ஒற்றுமைப் பலத்தைக் காண்பிக்க முடியும் என்றும் லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
நவ. 07 10:02

எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா கினிகத்தேனை பொல்பிட்டியப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தைச் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.