நவ. 08 14:17
(அம்பாறை, ஈழம்)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் இங்கு வந்த இலங்கை இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நிறுத்தவில்லையானால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.