(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 267 பேருக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்ஸ், தென்கொரிய, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களினாலேயே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் சுகாதா அமைச்சர் பவித்திரா வன்னியராட்சி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.