செய்தி: நிரல்
நவ. 27 22:47

முப்படையினரின் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினரின் தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.05க்கு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர். சைவக் குருமார், அருட்தந்தையர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இராணுவத்தின் கடுமையான அச்சறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டங்களுக்கு முன்பாக சுடரேற்றினர். இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மார்ட்டீனார் குருமடத்துக்கு முன்பாக சுடரேற்றிய குற்றச்சாட்டில், அந்தக் குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இரவு அருட்தந்தை கைது செய்யப்பட்டதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
நவ. 21 22:47

முப்படையினருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை மாலை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நவ. 10 22:56

பைடன் நிர்வாகம் கோட்டாபய அரசாங்கத்தை அரவனைக்கும்- இந்தியப் பத்திரிகையாளர் பாலச்சந்திரன்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் இறங்கிச் செல்லுமெனவும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை அரவனைக்க வேண்டியதொரு தேவை அமெரிக்காவுக்கு உண்டெனவும் எமது கூர்மைச் செய்தித்தளம் தொடர்ச்சியாகச் செய்திக் கட்டுரைகளை எழுதிவருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ஒற்றை ஆட்சி இலங்கையை ஆரத்தழுவிச் சென்றிருக்கிறாரெனவும் கூர்மைச் செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.
நவ. 06 21:46

கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குழறுபடிகளுக்கு மத்தியில் எவர் பதவியேற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் சார்ந்த விடயங்களைச் சாதகமாகப் பயன்படுத்தியே தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்தோ- பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகள் என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கைகளிலேயே உண்டு. ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆசியப் பிராந்தியச் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருக்காதென்றே கூறலாம்.
நவ. 01 22:07

ஈழப் போராட்டத்திற்கு உதவிய கொட்டகலை மேரியம்மா காலமானார்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட வரதன் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஜேக்கப் மேரியம்மா (மேரி அக்கா) நேற்றுச் சனிக்கிழமை நுவரெலியா கொட்டகலையில் தனது 81ஆவது வயதில் காலமானார். 1994ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி என்ற தொழிற் சங்கத்தை ஆரம்பித்தவரும் அதன் தலைவருமான முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக இருந்தது.