(மன்னார், ஈழம் )
தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் காணிகளின் உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா, முள்ளிக்குளம் ,ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளே இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.