செய்தி: நிரல்
ஜூன் 19 21:13

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

(மன்னார், ஈழம் ) இலங்கை வட மாகாணம் மன்னார் மாவட்டக் கடற்கரைகளில் இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். ஏலவே கொழும்பில் தீ விபத்திற்கு உள்ளான எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) சரக்கு கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுடைய இரசாயனப் பொருட்கள் மன்னார் மாவட்டக் கடற்கரைகளின் பல இடங்களிலும் கரையொதுங்கி கடற்கரைகள் மாசடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகளும் கரையொதுங்கி மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதிகளை மேலும் மாசடையச் செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
ஜூன் 18 21:42

13 ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய அதிகாரங்கள் மீள பெறப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஆட்சிக்கு வரும் இலங்கை சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் தற்பொழுது மாகாண சபைகளுக்கு உள்ள கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் அதிகாரங் களையும் பறித்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்ப தாகத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ. சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 18 19:59

கடற்பரப்பில் பழைய வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியா இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்பரப்பில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனைக் கண்டித்தும் இவ்விடயத்தில் இந்தியா மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இராமேஸ்வரம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற மேற்படிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்ந பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
ஜூன் 17 23:02

இந்தியத் தூதுவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன், மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜூன் 16 20:47

அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் விசேட அனுமதிப் பத்திரங்கள் துஸ்பிரயோகம்- மன்னார் அரச அதிபர்

(வவுனியா, ஈழம்) கொவிட்- 19 நோய் பரவல் காரணமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட செயலகம் மூலம் வழங்கப்படும் விஷேட பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளும் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பொலிஸாரினால் தனக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கையில் வேகமாகப் பரவும் கொவிட்- 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தீவு முழுதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இறுக்கமான நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.