செய்தி: நிரல்
டிச. 29 21:43

வடமாகாணத்தில் நான்கு இளைஞர்கள் கொலை

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஞாயிற்றுகிழமை ஆண்கள் நால்வரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 51 வயதுடைய அப்துல் ரசாக் முகம்மது கௌவ்ஸ் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். ஞாயிறு முற்பகல் 11.30க்கு மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களால், இவர் வாள்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
டிச. 29 21:28

டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்

(யாழ்ப்பாணம், ஈழம்) டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளமை உண்மைக்கு மாறானதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 3.1 பில்லியன்களாக அதிகரித்துள்ளதென்று அஜித் நிவாட் கப்ரால் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நளின் பண்டார, கடந்த வாரம் 1.6 பில்லியன்களாக இருந்து திடீரென எவ்வாறு 3.1 பில்லியன்களாக உயர்வடைந்தது என்று அஜித் நிவாட் கப்ரால் கூற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
டிச. 28 22:24

மன்னார் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தோல்வி

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி நிருவாகத்தில் உள்ள மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நேற்றுத் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பான கூட்ட அமர்வு பேசாலையில் உள்ள மன்னார் பிரதேச சபையின் பிரதான செயலகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
டிச. 27 22:32

பசில் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த விஜயதாச

(வவுனியா, ஈழம்) சீனாவை எதிர்த்து நிற்கும் சக்தி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க- இந்திய அரசுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்த அரசாங்கத்துக்கு சீனாவை நேரடியாக எதிர்க்கத் தகுதியில்லை என்றும், சீனாவின் கடன் பிடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முரண்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தரப்பில் தனித்துச் செயற்பட்டு வரும் விஜயதாச ராஜபக்ச. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்தார்.
டிச. 25 21:03

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மருத்துவக் கழிவுப் பொருட்கள்

(முல்லைத்தீவு) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்திய முகக்கவசங்கள், மருத்துவக் கழிவுகள், அன்றாட பாவனைப் பொருட்களின் வெற்றுப்பிளாஸ்ரிக் கொள்கலன்கள் மற்றும் பாலித்தீன் பைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான கழிவுப் பொருட்கள் வட மாகாணத்தின் முல்லைத்தீவு கடற்பரப்பில் தினமும் கரையொதுங்குவதுடன் அவற்றினால் மீனவர்களின் வலைகள் கடுமையாகச் சேதமடைவதாக மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.