ஒக். 18 08:24
(வவுனியா, ஈழம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை பொலிஸார் மாணவர்களுக்கு வழங்கியபோதும், மாணவர்கள் அதனை எற்றுக்கொள்ளவில்லை.