ஜன. 31 22:39
(வவுனியா, ஈழம்)
பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று தேரர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.