செய்தி: நிரல்
பெப். 02 23:14

பதின்மூன்றுக்கு மகாநாயக்கத் தேரர்கள் எதிர்ப்பு- இலங்கைத்தீவைப் பிளவுபடுத்தும் என்று கடிதம்

(வவுனியா, ஈழம்) புதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கைத்தீவின்; சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்குமென மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஏல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட சில முக்கியமான மூத்த தேரர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மகாநாயக்கத் தேரர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜன. 31 22:39

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம்- தேரர்கள் ரணிலுக்குக் கடிதம்

(வவுனியா, ஈழம்) பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று தேரர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
ஜன. 30 22:14

உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தேர்தலைக் கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதற்குப் பின்னால் உள்ள அரசியல் செல்வாக்குத் தொடர்பாக பெப்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜன. 26 22:47

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கமா?

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குக் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக் கலந்துரையாடல்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக அரசாங்கம் அறிவித்தபோதும் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.
ஜன. 25 23:41

தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் ரணில் ஏமாற்றுகிறாராம்- பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதே 2017 ஆம் ஆண்டுதான் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ரணில் பேசுகிறார். தமிழரசுக் கட்சி கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் சமஸ்டித் தீர்வு பற்றிப் பேசவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் தீர்வு அல்ல என்று கூறுகின்றனர்.