செப். 06 16:57
முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என இந்திய ஒன்றிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) உத்தரவிட்டுள்ளது. 2014இல் வழங்கப்பட்டத் தீர்ப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்திய மத்திய அரசு இவ்வழக்கை அரிதிலும் அரிதான வகையில் பார்க்க வேண்டும், ஆதாலால், மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற தமிழக அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.