டிச. 08 11:54
(மட்டக்களப்பு, ஈழம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருவதனால் பொதுமக்கள் பயணம் செய்யும் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் தற்போது தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையினால் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், அதனால் வீதிவிபத்துக்கள் ஏற்படுவதாகவும் ஆலங்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் சி.மதியழகன் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார். கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கும், குகனேசபுரம், மேவான்டவன் கிராமம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதையில் சுமார் ஐந்து அடிக்கு மேல் நீர்தேங்கிக் காணப்படுவதனால் பொதுமக்கள் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.