ஏப். 18 23:30
(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையில் தற்போது பிரதான சிங்களக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவடுவதற்காக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் (USNS Millinocket), யு.எஸ்.எஸ் ஸ்ப்ருவன்ஸ் (USS Spruance), ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளன.