(வவுனியா, ஈழம்)
ஈழத்தமிழர் அரசியல் விடுதலை தொடர்பான கருத்துக்களில் அவ்வப்போது குழப்பமான நிலைப்பாட்டோடு செயற்பட்டு வரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் நாட்டில் எவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போகின்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டு, தற்போது தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ள சிவாஜிலிங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பேசவுள்ளதாகவே அவரது கூட்டமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன.