(மட்டக்களப்பு, ஈழம்)
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமையாகக் கொண்ட, ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நிலைமை குறித்தும், மஹிந்த ராஜபக்ச அணியின் மக்கள் செல்வாக்கின் பின்னணியில் மேற்குலகநாடுகள், இந்த அரசியலை. நகர்த்தி்ச் செல்லுகின்றதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன