கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 10 00:55

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

(மன்னார், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது.
நவ. 08 16:46

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?

(முல்லைத்தீவு, ஈழம்) மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியல் யாப்பை மீறும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாதென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நவ. 06 14:31

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஜே.வி.பியோடு சம்பந்தன் ஏற்படுத்திய இணக்கம் என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்கும் போட்டியில் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் பேரம்பேசி வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பான தலையீட்டினை மேற்கொள்வது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருகட்சிகளின் தலைவர்களும் கூறியுள்ளனர்.
நவ. 04 00:48

மஹிந்த பிரதமரானமை அராஜகம் என்றால், தமிழர்களின் 70 ஆண்டுகால போராட்டத்தை அழித்தமை எந்த வகையான ஜனநாயகம்?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ ரீதியான புரட்சிக்கு அல்லது வன்முறைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவதானமாகவே இருக்கின்றன. பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு இலங்கையின் அரசியல் யாப்பு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன. அதுவும் அமெரிக்கா இரண்டு தடவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் யாப்பை கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கூறியுள்ளார்.
நவ. 01 23:13

மஹிந்தவுக்கு சம்பந்தன் ஆதரவு வழங்க வேண்டும், சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்- உதவி செய்யவும் தயார் என்கிறார்

(மட்டக்களப்பு, ஈழம்) மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக இந்தியாவுடன் பேசியே முடிவு எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஆளும் இந்திய பா.ஜ.க. அரசின் மூத்த உறுப்பினர் சட்டத்தரணி சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை தனது ரூவிற்றர் தளத்தில் அவர் இவ்வாறு கோரியுள்ளார். சம்மந்தனும் மஹிந்தவும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஒக். 24 11:48

பெண் சமத்துவ நிலைநிறுத்தலில் மீரூ இயக்கமா விடுதலைப்புலிகளா தமிழர்களுக்கான முன்னுதாரணம்?

பிரபலங்களிடையே பாலியல் கலாசாரத்தில் சமத்துவம் என்பதையே சமுதாயத்திற்கான பாலியல் சமத்துவமாகச் சித்தரிப்பதோடு தனது தேவையை முடித்துக்கொள்கிறது இன்றைய மீரூ இயக்கம். குடும்ப மட்டத்திலே பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை இல்லாமற் செய்யவல்ல வேலைத்திட்டங்களை எந்தவித விளம்பரங்களும் இன்றி விடுதலைப் புலிகள் சாதித்திருந்தார்கள். இவற்றை ஈழத்தமிழர்களே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்மயியும் வரலட்சுமியும் தற்போது பேசியிருப்பவற்றை இந்தக் கோணத்தில் நோக்கவேண்டும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வன்னியில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிர்பிழைத்துத் தனது அனுபவங்களைக் கேள்விகளாக உலக மானுடத்திடம் எழுப்பிவருபவருமான 70 வயது நிரம்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர் பெண்மணி முனைவர் ந. மாலதி.
ஒக். 17 20:04

தமிழ்த் தரப்பினால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சிகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப செயற்படுமா?

(கிளிநொச்சி, ஈழம்) பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு எந்தவிதமான அரசியல் தயாரிப்புகளும் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா - சிவபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய திருகோணமலை, முல்லைத்தீவுக் கடற் பிரதேசங்களில் அமெரிக்கா எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
ஒக். 17 15:03

இலங்கை மீதான வல்லரசுகளின் ஆதிக்கம், கொழும்பு அரசியலில் முரண்பாடுகளை உருவாக்கும் பூகோள அரசியல்

(மன்னார், ஈழம்) இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்றும் இந்த சதித் திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் தொவித்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஒக். 15 00:04

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டின் பின்னர் மைத்திரி சீனாவுக்கும் ரணில் டில்லிக்கும் பயணம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்குரியவாறு தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
ஒக். 13 15:08

சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாகப் பேச்சுரிமை மறுப்பு

(வவுனியா, ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் எதிர்க்கட்சி வரிசையில் தனித்து இயங்கி வருகின்றார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் நான்கு தடவைகள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சிறப்புரிமைப் பிரச்சனையை முன்வைத்து தனக்குரிய நேர ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சபாநாயகர் கருஜெயசூரிய நடவடிக்கை எதையுமே எடுக்கவில்லை.