ஏப். 04 23:50
(வவுனியா, ஈழம்)
கொரானா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில். இலங்கையில் இதுவரை பண்ணிரன்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. வடமாகாணம் யாழ்ப்பாணத்தில். அரியாலை, தாவடி பிரதேசம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பின் குநகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை போரத்தொட்டை ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பிரதேசங்கள் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.