ஏப். 08 22:57
(வவுனியா, ஈழம்)
இலங்கையில் இதுவரை ஏழுபேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கொழும்பு ஐடிச் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்ததையடுத்தே உயிரிழப்பு ஏழாக அதிகரித்துள்ளது. 42 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் 139 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். களுத்துறை, அக்கரைப்பற்று, கண்டி., கேகாலை பின்னவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதென்றும் எவரும் உள்ளே வரமுடியதெனவும் சுகாதாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.