ஒக். 09 22:59
(வவுனியா, ஈழம்)
இலங்கைக்கு வருகை தந்துள்ள 26பேர் கொண்ட சீனத்தூக்குழுவுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரிசோதனைகூட செய்யப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சீனக்குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி தொடுத்தார். முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரியுமான யாங் ஜீயேஷ தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 26 பேர் கொண்ட தூதுக்குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியேர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.