ஒக். 28 23:18
(வவுனியா, ஈழம்)
ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகப் பண்புள்ள முழுமையான சுதந்திரமும் இறைமையுமுள்ள இலங்கையோடு நட்பைப் பலப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.