செய்தி: நிரல்
ஒக். 09 22:40

மன்னாரில் சரணடைய வந்த ஐவர் விபத்தில் காயம்

(மன்னார், ஈழம்) கோஷ்டி மோதல் தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் சரணடையச் சென்ற ஐவர் இன்று 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30க்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் எழுத்தூர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தோட்டக்காடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியாருக்குச் சொந்தமான காணியொன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மற்றுமொரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு பெரும் மோதலாக உருவெடுத்தது.
ஒக். 08 21:39

இனவாதத்தை அரசாங்கம் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) ராஜபக்ச அரசாங்கம் மற்றுமொரு இனவாத மோதலுக்குத் துண்டுவதாக இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமைச்சர்கள் சிலரும் மற்றும் பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் ஆகியோரின் பேச்சுகள். செயற்பாடுகள் அச்சத்தை உருவாக்கி வருவதாகவும் கூட்டிக்காட்டியுள்ளனர். சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மகுறூப். ஞானசார தேரரின் செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறினார்.
ஒக். 07 20:38

ராஜபக்ச குடும்பத்தின் சொத்து என்கிறது எதிர்க்கட்சி

(மன்னார், ஈழம்) மூலம் வெளிப்படுத்தப்படட நிருபமா ராஜபக்ச அவருடைய கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமானவையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலருடைய பெயர்கள் வெளிவரலமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளர்.
ஒக். 06 21:24

கோயில்மோட்டை காணி விவகாரம்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச த்தில் உள்ள அரச காணியான கோயில்மோட்டை எனும் விவசாயக் காணியை மடு மாதா ஆலய நிருவாகத்தினர் தற்போது உரிமை கோரி வருவதாகவும், எனினும் அதனை நீண்ட காலமாக நெற்செய்கை மேற்கொண்ட தமக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மடுப் பகுதியைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள் நேற்று செவ்வாய் மாலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒக். 05 10:44

திருகோணமலையில் புதிய எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க முடியாதென்கிறார் அமைச்சர் கம்மன்பில

(வவுனியா, ஈழம்) திருகோணமலை எண்ணெய் வளாகத்தில் புதிய எண்ணெய் தாங்ககளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்திய இலங்கையுடன் பேசி இணக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் அமைச்சரான உதயகம்பன்பில அதற்கு எதிர்ப்புத் வெளியிட்டுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.