ஒக். 09 22:40
(மன்னார், ஈழம்)
கோஷ்டி மோதல் தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் சரணடையச் சென்ற ஐவர் இன்று 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30க்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் எழுத்தூர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தோட்டக்காடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியாருக்குச் சொந்தமான காணியொன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மற்றுமொரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு பெரும் மோதலாக உருவெடுத்தது.